நடமாடும் வியாபாரத்தினை முறைப்படுத்தும் நடவடிக்கை

பிரதேச சபை சட்டம் மற்றும் உபவிதிகளுக்கு அமைவாக பிரதேச சபைகளின் சந்தைகளில் இருந்து 500 மீற்றர் குறுக்கு தூர சுற்றளவு பிரதேசத்தில் கடலுணவு மற்றும் மரக்கறி விற்பனை செய்வது சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடமாடும் மீன் வியாபாரிகளை முறைப்படுத்த களநடவடிக்கைகள் மல்லாகம் உப அலுவலகத்தினரால் 22.06.2024 மேற்கொள்ளப்பட்டது.

ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பான கலந்துரையாடல்

சுயதொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தேவைப்பாடுகளை அறிந்து வசதிப்படுத்தும் முகமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அறிவுறுத்தலுக்கமையவும் காங்கேசன்துறை நகர ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பாக 13.06.2024 ல்  கலந்துரையாடல்நடைபெற்றது

கட்டிட அனுமதி தொடர்பான பயிற்சி செயலமர்வு

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து   நடைமுறை விடயங்கள் மற்றும் வினைத்திறனான சேவை வழங்கலில் உள்ள தடைகளை நீக்குதல் தொடர்பாக சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சபையின் அனுமதிபெற்ற படவரைஞர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று 12.06.2024 சபாமண்டபத்தில் இடம்பெற்றது.

சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடு

சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யா/வீமன்காமம் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு திரைக்காட்சி, துண்டுப்பிரசுரங்களினூடாக சுற்றாடல்சார் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. மேலும் மரநடுகையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றன. 12.06.2024

 

மல்லாகத்தில் மீளவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஆரம்பித்துள்ளது – பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை

மல்லாகம் பகுதியில் மீளவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஆரம்பித்ததன் விளைவால் இரு நோயாளர்கள் மல்லாகம் மத்தி மல்லாகம் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  10,06,2024 நேற்றைய தினம் டெங்கு நுளம்பு உருவாவதற்கு ஏதுவான கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் தவறும் ஆதன உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் வழங்கப்பட்டதுடன் இன்றைய தினம் 11.06.2024 பொதுச்சுகாதாரதுறையினருடன் இணைந்து களபரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைவாக. மல்லாகம் சேர்ச் லேன் , மல்லாகம் கோட்ஸ் லேன். காளிகோவில் வீதி. மல்லாகம் டிப்போ வீதி என்பன உள்ளடக்கப்பட்டன.

உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்

பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் யூன்- 05 உலக சுற்றாடல் தின நிகழ்வின் ஒருபகுதியாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு காட்சிப்பொருள், வீடியோ படம், துண்டுப்பிரசுரங்களூடாக சிந்தனைக் கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

இலத்திரனியல் சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு

ஆசிய மன்றத்தின் நிதிபங்களிப்பில் Centre for Governance Innovations (CGI) அமைப்பினரால் தெல்லிப்பளை பொதுநூலக Digital knowledge center இற்கான 1.8 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள், தளபாடங்கள் முறைப்படி கையளிக்கப்பட்டன.

உள்ளூர் உற்பத்திக்கோர் திறவுகோல் Farm to Gate🔹️

உங்களுடைய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை முற்றிலும் இலவசமாக விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவற்கான ஓர் அரிய வாய்ப்பு❕️
▶️ இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை……..
1️⃣ Farm to gate இன் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.
2️⃣ தங்களது விபரங்களை பதிவு செய்வதன் மூலம் பயனாளர் பெயர் (User name), கடவுச்சொல் (Password) என்பவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.
3️⃣ தங்கள் தேசிய அடையாள அட்டையின் இரு பக்கங்களையும், தங்கள் தொலைபேசி இலக்கத்தினையும் 0707213728 என்னும் Whatsapp இலக்கத்திற்கு அல்லது npfarmtogate@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
4️⃣ தங்கள் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றதும் தங்கள் பொருட்கள் சேவைகளை எவ்வித கட்டணங்களுமின்றி விளம்பரப்படுத்தலாம்.
♦️ சுயமாக இணையத்தளத்தினை அணுக இயலாதவர்கள் வடமாகாணத்திலுள்ள எந்த ஓர் உள்ளூராட்சி மன்றத்திற்கும் சென்று பதிவினை மேற்கொண்டு தங்களது வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.
🌐 வடமாகாணத்தின் farm to gate என்னும் இலவச சந்தைப்படுத்தல் தளம் உங்கள் கைகளில்.
🎯 உங்கள் உற்பத்திகளுக்கான நியாயமான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலிசாருடன் இணைந்து சபை உத்தியோகத்தர்கள் துப்பரவு பணிகளில்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் சபை உத்தியோகத்தர்களால் தெல்லிப்பளை நகரை அண்மித்தபகுதிகளில் பிளாஸ்ரிக்,பொலித்தீன் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒழுக்காற்று நடைமுறைகள்” தொடர்பிலான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி

உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை
அதிகரிக்கும் நோக்கில் ”  மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் 31.05.2024 அன்றுநடாத்தப்பட்டது.
Translate »