வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் தொடர்ச்சியாக சபையின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக “அனைத்து வடிவங்களிலும் உள்ள வறுமையினை ஒழித்தல்” என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு கோழிக்கூடுகள் வழங்கி வைக்கப்பட்டன.