













தெல்லிப்பளை பொதுநூலக டிஜிட்டல் அறிவு மைய செயற்றிட்ட அடிப்படையில் வலிவடக்கு பிரதேச சபையுடன் இணைந்து ஆளுகைக்கான புத்தாக்க மையத்தினால் (CGI) இணையப் பாவனை, இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட தகவல் பகிர்வு அமர்வு இன்று (12.08.2024) சபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக பிரதி வெள்ளிக்கிழமைகளில் “கோடிலியா குறூஸ்” எனும் சொகுசுக்கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வரும் சுற்றுலாவிகளின் வசதி கருதியும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தும் முகமாகவும் எமது சபையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் பதிவு ஒர் ஆவணப்படுத்தலாக பதிவிடப்படுவதுடன் சுயதொழில் உற்பத்தியாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வசதியேற்படுத்தப்படுமென்ற தகவலையும் அறியத்தருகின்றோம்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கக்கூடிய இடங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுற்றுலா வழிகாட்டிக் கையேடுகள் வழங்கப்பட்டபோது.