வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் புனித சுற்றுலத்தல பிரதேசத்தின் புனிதத்தை மேம்படுத்தும் நோக்கில் கடற்கரை பகுதிகளை அழகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் சபைநிதி மூலம் அமைக்கப்பட்ட மண்டப முன்மேடை மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்படுகின்றது.
கீரிமலையின் புனிதத்தை தொடர்ந்தும் பேணவும் மேலதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் சபை உறுதியாகவுள்ளதுடன் சேதங்கள் ஏற்படாது சுத்தமாக பேண பொதுமக்களின் பொறுப்புணர்வும் ஒத்துழைப்பும் பெரிதும் வேண்டப்படுகிறது.


