எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “Clean Sri Lanka” எண்ணக்கருவிற்கு அமைய நீண்ட கால திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச திண்மக்கழிவகற்றல் மேற்பார்வை குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் Save a Life அமைப்பினருடன் 2025.02.18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர், யாழ் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரதிநிதி,தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதி, வலிகாமம் வலயக்கல்வி அலுவலக பிரதிநிதி, மயிலிட்டி துறைமுக அதிகார சபையின் பிரதிநிதி, எமது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.