நீண்ட காலம் செயலற்றிருந்த வசந்தபுரம், சேந்தான்குளம் (இளவாலை) கிராமிய நீர் விநியோகமானது குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதியினூடாக புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது நீர் விநியோக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளர்கள் பொறுப்புணர்வுடன் நீரை சிக்கனமாகவும், நீர்க்குழாய் மற்றும் கட்டுமானங்களை பாதுகாப்பாகவும் பயன்படுத்தி தொடர்ச்சியான நீர் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம்.