தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலைமையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ( வெள்ள நிலைமை, வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்தல், மின்சாரக் கம்பங்கள் சாய்தல், இடப்பெயர்வு போன்றன தொடர்பாக) உதவிகள் தேவைப்படின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம்
.
நூலக அங்கத்தவர்களை புதிதாக சேர்க்கும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அடைவினை அடைந்த வலிகாமம் வடக்கு பிரதேசசபை பொதுநூலக நூலகர்களுக்கான மற்றும் செயலாளருக்கான உள்ளூராட்சி ஆணையாளரின் கையொப்பமிட்ட பாராட்டு மெச்சுரை வட மாகாண கெளரவ ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்

“உலக கழிப்பறை தினத்தினை” முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய “சுகாதார வசதிகளுக்கான அணுகலினை ஏற்படுத்தி கொடுத்தல்” எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் முகமாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் அடிப்படை சுகாதார வசதிகளற்ற ஒரு குடும்பத்திற்கு கழிப்பறை அமைப்பதற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் எல்லைக்குள் வர்த்தக நடவடிக்கையினை மேற்கொள்கின்ற அனைவரும் தங்கள் நிறுக்கும் , அளக்கும் உபகரணங்களை சரிபார்த்து முத்திரை இட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பின்வரும் இடங்களில் பின்வரும் கால ஒழுங்கில் நடைபெற உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
2024.09.04 மல்லாகம் உப அலுவலகம்
2024.09.05 மயிலிட்டி உப அலுவலகம்
2024.09/06.09.10 தெல்லிப்பளை உப அலுவலகம்
தெல்லிப்பளை பொதுநூலக டிஜிட்டல் அறிவு மைய செயற்றிட்ட அடிப்படையில் வலிவடக்கு பிரதேச சபையுடன் இணைந்து ஆளுகைக்கான புத்தாக்க மையத்தினால் (CGI) இணையப் பாவனை, இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட தகவல் பகிர்வு அமர்வு இன்று (12.08.2024) சபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக பிரதி வெள்ளிக்கிழமைகளில் “கோடிலியா குறூஸ்” எனும் சொகுசுக்கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வரும் சுற்றுலாவிகளின் வசதி கருதியும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தும் முகமாகவும் எமது சபையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் பதிவு ஒர் ஆவணப்படுத்தலாக பதிவிடப்படுவதுடன் சுயதொழில் உற்பத்தியாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வசதியேற்படுத்தப்படுமென்ற தகவலையும் அறியத்தருகின்றோம்.


வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கக்கூடிய இடங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுற்றுலா வழிகாட்டிக் கையேடுகள் வழங்கப்பட்டபோது.
